தஞ்சையில் தியாகி இமானுவேல் சேகரனின் 66வது நினைவு நாள் அனுசரிப்பு..!

தஞ்சை, சாதி ஒழிப்பு, , சமத்துவ போராளி, மாவீரர் தியாகி. இம்மானுவேல் சேகரனின்,66-ஆம் ஆணடு  நினைவு நாளை முன்னிட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆதித்தமிழர் பாதுகாப்பு பேரவை முன்பாக உள்ள , தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு தஞ்சை மைய மாவட்ட செயலாளர்,கோ. ஜெய்சங்கர் தலைமை வகித்தார். மாநகர முன்னாள் செயலாளர் தமிழ் முதல்வன், சமூக நல்லினக்கப் போராளி, மாநில துணை செயலாளர்  சிவா தமிழ் நீதி, தஞ்சை ஒன்றிய செயலாளர், மறியல் வினோத்,  தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர், அரங்க குரு, உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அதன் பின்பாக, மாவீரர் தியாகி இமானுவேல் சேகரனின்  திருஉருவப்
படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டு அனைவராலும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நடைபெற்ற நிகழ்வில் மகளிர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் ராசாத்தி,சாமி குருமாரன், தஞ்சை மேற்கு ஒன்றிய செயலாளர் நாகத்தி வினோத்,
குருங்குளம் முருகானந்தம், முன்னாள் ஒன்றிய செயலாளர் கோதண்டபாணி, விளார்பாஸ்கர் தஞ்சை ரமேஷ்,  வழக்கறிஞர் ஜெய்சங்கர், வயலூர் பரத் மற்றும் பலர் கலந்து கொண்டு தியாகி இம்மானுவேல் சேகரனின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்..