திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம்..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சின்னாம் பாளையத்தை சேர்ந்தவர் இந்திரஜித் (வயத 29). அழகு கலை நிபுணர்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவருக்கு ஆனைமலை சோமந்துறை சித்தூரை சேர்ந்த நிவேதா (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் வீட்டிற்கு தெரிய வந்தது. 2 பேரும் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது.

இதனால் தங்களை பெற்றோர்கள் பிரிந்து விடுவார்கள் என்ற பயத்தில் இருந்த காதலர்கள் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறினர்.பின்னர் திருமூர்த்திமலையில் உள்ள கோவில் வைத்து திருமணம் செய்தனர்.இதனையடுத்து திருமணம் செய்து கொண்ட காதலர்கள் பெற்றோர்களால் தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி பாதுகாப்பு கேட்டு பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.