மகாவீர் ஜெயந்தி: கோவையில் நாளை இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு..!

கோவை மாநகராட்சி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:நாளை (செவ்வாய்க்கிழமை) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ஜெயின் கோவில்களின் அருகாமையில் செயல்படும் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி ,பன்றி இறைச்சி, கடைகளை மூடுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது . இந்த உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது..