கோவை மருத்துவமனை 5-வது மாடியில் இருந்து குதித்து நோயாளி தற்கொலை..

கோவை : சேலம் மாவட்டம் ஜாகீர் அம்மாபாளையத்தைச் சேர்ந்தவர் புகழ் ராஜா (வயது 37) இவர் கடந்த மாதம் 19 ஆம் தேதி சேலத்தில் நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்து கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று பொது வார்டுக்கு மாற்றப்பட்டார். அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அருகில் இருந்து அவரை கவனித்து வந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் அறையில் இருந்து வெளியே வந்த புகழ் ராஜா மருத்துவமனையின் 5-வது மாடிக்கு சென்றார். அங்கிருந்து கீழே குதித்தார் . அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பிணமானார். மன அழுத்தத்தின் காரணமாக இவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .இது குறித்து பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..