காதல் தோல்வி… விடுதி மாடியில் இருந்து குதித்து நர்சிங் மாணவி தற்கொலை..

கோவை : கன்னியாகுமரி மாவட்டம், நெய்யூர் பக்கம் உள்ள சார விளையைச் சேர்ந்தவர் செல்வன். இவரது மகள் பபிஷா ( வயது 18) சரவணம்பட்டி – துடியலூர் ரோட்டில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அங்குள்ள மாணவிகள் விடுதியில் தங்கியிருந்தார். நேற்று இவர் மாடியில் இருந்து ஒருவரிடம் நீண்ட நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தாராம்.. அப்போது திடீரென்று மாடியில் இருந்து குதித்தார். இதில் இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இன்று காலையில் இறந்தார். இவர் பள்ளிப்பருவத்திலிருந்து தன்னுடன் படித்த மாணவர் ஒருவரை காதலித்து வந்ததாகவும், அந்தக் காதலில் ஏற்பட்ட தோல்வியால் தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து விடுதி வார்டன் மஞ்சுளா சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..