மாஜி அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை திருட்டு..!

கோவை சிங்காநல்லூர், சிவா கார்டனை சேர்ந்தவர் வைகுண்டம் (வயது 68) இவர் தேசிய நெடுஞ்சாலை துறையில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார் .இவர் கடந்த 28ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சேலம் சென்றிருந்தார். நேற்று வீடு திரும்பினார் அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 18 பவுன் தங்க நகைகளை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இதுகுறித்து வைகுண்டம் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.