காதல் தோல்வி: வட மாநில வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை..

கோவை: அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் அபிலாஷ் (வயது 20) இவர் துடியலூர் என். ஜி.ஜி. ஓ காலனி பகுதியில் உள்ள ஒரு மில்லில் தங்கி இருந்து வேலை செய்து வந்தார். இவர் அதே மில்லில் வேலை பார்த்து வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்தார். அந்தப் பெண் இவரது காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் மனமுடைந்த அபிலாஷ் நேற்று மில்லின் பின்புறம் உள்ள வேப்ப மரத்தில் கயிற்றை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் . இது குறித்து அவரது தாயார் சீராமோதி துடியலூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.