சேவல் சண்டை நடத்தி சூதாட்டம் – கோவையில் 5 பேர் கைது..!

கோவை மாவட்டம் ,வடக்கி பாளையம் பக்கம் உள்ள கோவிந்தனுர் .பாறைமேடு பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக வடக்கு படை போலீஸ் தகவல் வந்தது சப் இன்ஸ்பெக்டர் கணேச மூர்த்தி நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக குள்ளி செட்டிபாளையம் அஸ்வின் ( வயது 18) டி. நல்லி கவுண்டம்பாளையம் கோகுலகிருஷ்ணன் ( வயது 18) வடக்கிபாளையம் நாகராஜ்(வயது 53) ராம பட்டினம் நாச்சிமுத்து(வயது 55) குள்ளிசெட்டிபாளையம் கருப்பசாமி ( வயது 47) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சூதாட பயன்படுத்தப்பட்ட 2 சேவல்களும், 1370 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது..