காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடிகள்..!

கோவை ஆலாந்துறை அருகே உள்ள முண்டாந்துறை தோட்டத்தை சேர்ந்தவர் வீரபத்திரன் .இவரது மகன் பிரகதீஸ்வரன் ( வயது 27 )தனியார் நிறுவன ஊழியர். இவரும் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகள் ரோகினியும் (வயது 24) கடந்த 2 ஆண்டுகளுக்கு காதலித்து வந்தனர். இதற்குப் பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கணுவாய் அருகே உள்ள ஒரு கோவிலில் நேற்று திருமணம் செய்து கொண்டனர். பின்னர் காருண்யா நகர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்கள்.தங்களுக்கு பாதுகாப்பு கோரி புகார் மனு கொடுத்தனர். இதையடுத்து போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து சமரசம் பேசி அனுப்பி வைத்தனர்.மணமக்கள் காவல் நிலையத்தில் உள்ள அதிகாரிகளுக்கும் போலீசாருக்கும் நன்றி தெரிவித்து விட்டு சென்றார்கள்.