ஓட்டல் ஊழியரை தாக்கி செயின் பறிப்பு – ஒருவர் கைது..!

கோவை: கேரள மாநிலம் வடகரை, குனின் காட் பகுதியை சேர்ந்தவர் கே.கே. ஜெசில் (வயது 31) ரெஸ்டாரன்ட் ஊழியர். இவர் உடல்நல குறைவின் காரணமாக சிகிச்சை பெறுவதற்காக வீரப்பனூரில் இருந்து கோவை ரயில் நிலையத்திற்கு டவுன் பஸ்சில் வந்தார். லங்கா கார்னர் பாலம் அருகே இறங்கி நடந்து சென்றார். அப்போது அங்கு குடிபோதையில் நின்று கொண்டிருந்த 2 ஆசாமிகள் இவரை வழிமறித்து பணம் கேட்டனர். அவர் கொடுக்க மறுத்ததால் அவரை பிடித்து இழுத்து கீழே தள்ளி அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க செயினை பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர் .  இது குறித்து ஜெசில் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து புதுக்கோட்டை மாவட்டம் ,வடக்கு பட்டியை சேர்ந்த முரளிதரன் (வயது 36) என்பவரை கைது செய்தனர் .பாண்டி என்பவர் தப்பி ஓடி விட்டார் .அவரை தேடி வருகிறார்கள்.