கோவையில் அனுமதிக்கபட்ட நேரத்தை மீறி மதுபான பார்கள் செயல்பட்டால் உரிமம் ரத்து – போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை.!

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:- கோவை மாநகரில் தனியார் பார்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே திறந்து இருக்க வேண்டும். அதனை மீறி ஒரு நிமிடம் கடந்து கூடுதலாக திறந்து வைத்திருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி பார்களின் உரிமம் ரத்து செய்யப்படும். ஏற்கனவே இது போன்று கூடுதல் நேரம் திறந்திருந்த சில பார்களின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகரில் போதை பொருட்கள் கடத்தலை தடுக்க கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்..