சினிமா படம் போல… கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி கவிழ்ந்த ஜீப் – பதற வைக்கும் வீடியோ காட்சிகள்..!

கோவை சத்திய சாலையில் ஒருவர் தாறுமாறாக நான்கு சக்கர வாகனம் வந்தது. இதனால் சாலையில் சென்றவர்கள் அலறி அடித்து விலகி ஓடினர். இந்த நிலையில் சில வாகனங்களின் மீது அந்த நான்கு சக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. ஆனால் நிற்காமல் அந்த வாகனம் வேகமாக சாலையில் சென்றது. அப்பொழுது அந்த நான்கு சக்கர வாகனம் வழி தடுமாறி சென்று சிவானந்தபுரம் விவேகானந்தர் நகர் பகுதியில் இருந்து மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது.

அதில் நான்கு சக்கர வாகனம் ஓட்டி வந்தவர் தப்பினார். இதனை அடுத்து அங்கு பொதுமக்கள் கூடி அந்த வாகனத்தை ஓட்டி வந்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் இது குறித்து தகவல் பேரில் சரவணம்பட்டி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நான்கு சக்கர வாகனம் ஓட்டி வந்தவர் கோவை சரவணம்பட்டி அடுத்த விநாயகபுரம் லட்சுமி நகர் பகுதியில் சேர்ந்த அரவிந்த் என்றும், அவர் சரவணம்பட்டி பகுதியில் உணவுகம் நடத்தி வந்ததும் தெரிய வந்தது. சரவணம்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சரவணம்பட்டியில் கார் ரேஸ் சினிமா படப்பிடிப்பு போல் நடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.