கோவையில் சிறுத்தை நடமாட்டம்… சமூக வலைதளங்களில் வைரலாகும் சி.சி.டி.வி காட்சிகள்..!

கோவை: சூலூர் அருகே கருமத்தம்பட்டி, தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள ஒரு வீட்டு அருகே சிறுத்தை செல்வது போன்ற சி.சி.டி.வி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

அந்த சி.சி.டி.வி காட்சியில் இன்று அதிகாலை 18.03.2023 தேதி பதிவாகி உள்ளது. மேலும் அதில் பேசுகின்ற பெண் பதுங்கி, பதுங்கி பூனை போன்று பார்த்து செல்வதாகவும் கூறுகிறார். மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து கோவை, சூலூர் கடந்து கருமத்தம்பட்டி பகுதியில் சிறுத்தை வந்து உள்ளது. அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கடந்த இரண்டு நாட்களில் அப்பகுதியில் இரண்டு ஆடுகள் மற்றும் ஒரு கன்றுக் குட்டியை கொன்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இது குறித்து வனத் துறைக்கு இதில் விசாரணை நடத்தி, மனிதர்களை தாக்கும் முன்னர் அந்த சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.