இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கவலைக்கிடம்..

கடந்த 2023 ஆம் ஆண்டு இங்கிலாந்து மன்னராக இரண்டாம் சார்லஸ் பதவியேற்றார். அவரது மனைவி கமிலா சார்லஸ் இங்கிலாந்து ராணியாக பதவியேற்றார். அவர்களின் பதவி ஏற்பு விழா உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மன்னர் இரண்டாம் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக பகிங்காம் அரண்மனை தகவல் வெளியிட்டது. இதற்காக கடந்த ஜனவரி மாதமே மன்னர் சார்லஸ் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்ததாகவும் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவ கண்காணிப்பில் இருந்து வரும் மன்னர் சார்லஸின் உடல்நிலை தற்போது நாளுக்கு நாள் மிகவும் மோசமடைந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக மன்னரின் இறுதி சடங்குகள் குறித்த திட்டங்களை மன்னரின் உதவியாளர்கள் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மன்னரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் ஒருவேளை மன்னரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் அவருடைய இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நிகழ்வை பிரம்மாண்டமாக நடத்த அரண்மனை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

மன்னரின் இறுதி சடங்கு நிகழ்வுக்கான திட்டங்கள் ஆபரேஷன் மெனாய் பாலம் என்ற மறைமுக பெயரில் தயாராகி வருகின்றன.

ராணி எலிசபெத் கவலைக்கிடமாக இருந்தபோது அவருடைய இறுதிச்சடங்கு பணிகள் ஆபரேஷன் லண்டன் பாலம் என்று மறைமுக பெயரில் தயார் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.