நாயை கொன்று குப்பை தொட்டியில் வீச்சு-போலீசில் புகார்..

கோவை உடையாம்பாளையம், கண்ணபிரான் மில் ரோட்டில் உள்ள குப்பைத் தொட்டியில் ஒரு சாக்கு மூட்டை கிடந்தது. அதைப் பிரித்து பார்த்த போதும் ஒரு நாயை கொன்று,கால்களை கயிற்றால் கட்டி சாக்கு முட்டையில் அடைத்து வீசி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நாய்க்கு 6 வயது இருக்கும். ஆண் நாய் ஆகும். இதுகுறித்து மிருகங்கள் நல பாதுகாப்பு அதிகாரி பாலகிருஷ்ணன் பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்தபோது மொபட்டில் வந்த ஒருவர் ஒரு சாக்கு முட்டையை குப்பைத் தொட்டியில் வீசி சென்று இருப்பது பதிவாகி இருந்தது. இது குறித்து பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து நாயைப் கொன்று குப்பைத்தொட்டியில் வீசிய வரை தேடி வருகிறார்கள்.