கோவை அரசு மருத்துவமனையில் நோயாளியிடம் பணம் திருடிய ஆசாமிக்கு தர்ம அடி..!

கோவை : மேட்டுப்பாளையம் எம். எஸ்.ஆர்.புரத்தை சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி மரகதம் ( வயது 36) இவர் உடல்நல குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் “நியூராலஜி”வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று இவரது படுக்கையில் தலையணைக்கு அடியில் வைத்திருந்த பர்சை ஒரு ஆசாமி நைசாக திருடினார். அதில் ரூ. 200 இருந்தது. இதைப் பார்த்த மரகதம் சத்தம் போட்டார். அங்கிருந்தவர்கள் ஓடிவந்து அந்த ஆசாமியை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த முனியசாமி (வயது 39) என்பது தெரியவந்தது. இவரிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..