ஓடும் பஸ்சில் 2 பெண்களிடம் நகை, பணம் கொள்ளை – கோவையில் துணிகரம்..!

கோவை பக்கம் உள்ள சின்ன தடாகம். மடத்தூர்புதூரை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மனைவி நித்யா ( வயது 32 )இவர் நேற்று துடியலூரில் இருந்து தனியார் கவுன்சில் கோவை ஒப்பணக்கார வீதிக்கு வந்தார். பஸ் ஸ்டாப்பில் பஸ்சைவிட்டு இறங்கும் போது இவர் வைத்திருந்த பையைக் காணவில்லை .அதில் 3 பவுன் தங்க செயின், ரூ.52 ஆயிரம் பணம், செல்போன் ஆகியவை இருந்தது. ஓடும் பஸ்சில் யாரோ திருடிவிட்டனர். இது குறித்து நித்யா கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள் .

இதேபோல கோவை புலியகுளம் பஜார் வீதியை சேர்ந்தவர் லோகநாதன் .இவரது மனைவி கமலம் (வயது 62) வீட்டு வேலை செய்து வருகிறார் .இவர் நேற்று அரசு பஸ்சில் அவினாசி ரோடு லட்சுமி பஸ் ஸ்டாப்பில் இருந்து பீளமேடு வரதராஜா மில் பஸ் ஸ்டாப் வரை வந்து கொண்டிருந்தார். .அப்போது யாரோ இவர் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் செயினை திருடிவிட்டனர். இதுகுறித்து கமலம் பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.