பைக் – மொபட் மோதி விபத்து- கோவை போலீஸ்காரர் பலி..

கோவை உக்கடம் காவல் நிலையத்தில் எஸ். பி. சி. ஐ. டி போலீஸ் காரராக பணிபுரிந்து வந்தவர் மாரிமுத்து. இவர் நேற்று இரவு 11:30 மணி அளவில் வேலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக கோவை ஒப்பணக்கார வீதியில் இருந்து பெரிய வீதி செல்லும் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே 2 பேர் ஒரு வழி பாதையில் மொபட்டில் வந்தனர். அவர்கள் வந்த மொபட், பைக் மீது மோதியது . இதில் பயணம் செய்த 2 பேரும் மற்றும் போலீஸ்காரர் மாரிமுத்து ஆகியோர் படுகாயம் அடைந்தனர் .இவர்களில் போலீஸ்காரர் மாரிமுத்து அதே இடத்தில் பலியானார். இது குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.விபத்தில் போலீஸ்காரர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..