கோவை மாநகராட்சி முன்னாள் அதிகாரிக்கு சிறை தண்டனை.!!

கோவை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் சங்கரநாராயணன் ( வயது 75 ) இவர் அளவுக்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் வந்தது. இது தொடர்பாக கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய தில் கடந்த 1995 – ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் 2000 -ம் ஆண்டு இறுதி வரையிலான காலகட்டத்தில் சங்கரநாராயணன் வருமானத்தை காட்டிலும் கூடுதலாக ரூ.12, லட்சத்து 53 ஆயி த்துக்கு சொத்து சேர்த்திருப்பது தெரியவந்தது .இதையடுத்து சங்கர நாராயணன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர் . இந்த வழக்கு விசாரணை கோவை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மோகன ரம்யா குற்றம் சாட்டப்பட்ட ஓய்வு பெற்ற இளநிலை பொறியாளர் சங்கரநாராயணனுக்கு 1- ஆண்டு சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.