கோவை மாநகராட்சி சுகாதார மையத்தை உடைத்துக் கொள்ளை முயற்சி – வாலிபர் கைது..!

கோவை தெற்கு உக்கடத்தில் மாநகராட்சி சுகாதார மையம் உள்ளது. இங்கு நேற்று இரவு பூட்டை உடைத்து கொள்ள முயற்சி நடந்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி தெற்கு மண்டல உதவி கமிஷனர் கணேசன் கடைவீதி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்தனர். அதில் குற்றவாளி யார்? என்று தெரியவந்தது. விசாரணையில் அவர் புல்லுக்காடு அவசிங் யூனிட்டை சேர்ந்த அசாருதீன் என்ற சீனி அசார் என்பது தெரியவந்தது. இவர் கைது செய்யப்பட்டார்.