சமையல் தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், பைக் கொள்ளை – 2 பேர் கைது.!!

கோவை செல்வபுரம் செட்டி வீதியை சேர்ந்தவர் முனியன். அவரது மகன் மகேந்திரன் .சமையல் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று கோவை அரசு மருத்துவமனை முன் உள்ள டீக்கடையில் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த 2 பேர் மகேந்திரனிடம் காந்திபுரத்துக்கு எப்படி செல்ல வேண்டும்? என்று கேட்டனர். பின்னர் திடீரென்று கத்தியை எடுத்து இவரது வயிற்றில் வைத்து பணம் கேட்டு மிட்டினார்கள். பின்னர் அவரிடம் இருந்த 1 500 ரூபா பையும், பைக்கையும் பறித்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இது குறித்து மகேந்திரன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் வழக்கு பதிவு செய்து சிங்கநல்லூர் நீலிக்கோணாம் பாளையம், ஆர்.கே. கே நகரை சேர்ந்த சூர்யா (வயது 23) சங்கனூர் காந்திநகர் அருள் (வயது 23) ஆகியோரை நேற்று கைது செய்தார் மேலும் விசாரணை நடந்து வருகிறது.