குடிபோதையில் கார் மீது பைக் மோதி 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி..

கோவை அருகே உள்ள ஒத்தக்கால் மண்டபம்,அசோக் ரெசிடென்சி பகுதியைச் சேர்ந்தவர் ரவி (வயது 48) பழக்கடை நடத்தி வருகிறார்.நேற்று இவரும் அவரது கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் அதே ஊரைச் சேர்ந்த ராமன் ( வயது 50) என்பவரும் குடிபோதையில் ஒரே பைக்கில் பொள்ளாச்சி- கோவை ரோட்டில் வந்து கொண்டிருந்தனர்.ரவி பைக்கை ஓட்டி வந்தார். மலுமிச்சம்பட்டி அருகே வந்தபோது அந்த வழியாக கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்த ஆகேஷ் குமார் (வயது 24) என்பவர் ஓட்டி வந்த வந்த கார் மீது பைக் வேகமாக மோதியது.இதில் இருவரும் படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தனர்.இதுகுறித்து செட்டிபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது . போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிங்காநல்லூர் இ .எஸ். ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது..