தேசிய பறவையான மயில்கள் பலியான பரிதாபம்.. கோவையில் தொடரும் சோக சம்பவம்..

தேசிய பறவையான மயில்கள் கோவையில் பலியாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

மின் கம்பியில் சிக்கி தேசிய பறவையான மயில்கள் உயிரிழப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளான துடியலூர், வடவள்ளி, நரசீபுரம், தொண்டாமுத்தூர், மதுக்கரை உள்ளிட்ட கோவையின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான மயில்கள் உணவிற்காக கூட்டம் கூட்டமாக விளை நிலங்களிலும், மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கும் வருகை தருகின்றன. இந்நிலையில் மாநகரின் முக்கிய மையப் பகுதியான ரேஸ் கோர்ஸ் பகுதியில் ஏராளமான அரசு அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர், நீதிபதி, மாவட்ட வனத்துறை அலுவலர் போன்ற ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. அதனை சுற்றியுள்ள காலி இடங்கள் ஏராளமாக உள்ளன. அங்கு மைல்கள் கூட்டம் கூட்டமாக காணப்படும். இந்நிலையில் அவை மின் கம்பிகளில் சிக்கி பரிதாபமாக பலியாகும் சம்பவங்களும் அவ்வப் போது நடந்தேறி வருகின்றன. இந்நிலையில் இன்று ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மரில் சிக்கி தேசிய பறவையான இரு மயில்கள் பரிதாபமாக பலியாகி உள்ளன.

தொடர்ந்து தேசிய பறவையான மயில்கள் மின் கம்பியில் சிக்கி பரிதாபமாக பலியாகும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பறவை ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இதனை தடுக்க வனத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்..