பந்து எடுக்க சென்றபோது பாம்பு கடித்து 7 வயது சிறுவன் பலியான பரிதாபம்..

கோவை அருகே உள்ள சின்னியம்பாளையம் தியாகிகள் வீதியைச் சேர்ந்தவர் சுபாஷ் இவர் இறந்து விட்டார். இதனால் இவரது மனைவி பாக்கியம். தனது 7 வயது மகன் அருள்பாண்டியனுடன் சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள சிவராம் நகர் பகுதியில் தங்கிருந்து வீட்டு வேலை செய்து வருகிறார்.இவரது மகன் அருள் பாண்டியன் நேற்று அங்குள்ள ஒரு முதியோர் இல்லம் அருகே சிறுவர்களுடன் பந்து விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது பந்து முள்வேலியில் விழுந்தது. பந்தை எடுக்க அருள்பாண்டியன் சென்ற போது அவனது காலில் பாம்பு கடித்தது. உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தான்.இதுகுறித்து தாயார் பாக்கியம் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.