30 அடி உயர ரயில்வே பாலத்தில் இருந்து விழுந்து ஐ.டி. ஊழியர் பலி..

கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடை, தென்றல் நகரை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (வயது 45) ஐ .டி .ஊழியர். இவர் நேற்று தனது நண்பர்களுடன் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது மாமா வீட்டுக்கு சென்று இருந்தார்.பின்னர் கல்லார் பகுதியில் உள்ள 17- வது தூரி பாலத்துக்கு சென்றார்.பாலத்தின் மேல் நடந்து செல்லும் போது 30 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்தார். சிகிச்சைக்காக மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வழியில் அவர் இறந்து விட்டார். இதுகுறித்து அவரது மனைவி சோபி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.