வீடு புகுந்து 8 பவுன் நகை திருடிய வியாபாரி கைது..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள டி.நல்லி கவுண்டன் பாளையம், ராமர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் நாகரத்தினம் ( வயது 35 )தனியார் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார் .நேற்று மதியம் அவரது மனைவி பேரூர் கோவிலுக்கு சென்று விட்டார். நாகரத்தினம் வேலைக்கு சென்று விட்டார். அப்போது யாரோ வீட்டில் பாத்ருமில் இருந்த சாவியை எடுத்து கதவை திறந்து பிரோவில் இருந்த 8 பவுன தங்க நகைகளை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து நாகரத்தினம் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் செய்தார் . சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் மூர்த்தி வழக்கு பதிவு செய்து இவரது வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் கஞ்சம்பட்டி கந்தசாமி செட்டியார் காலனியைச் சேர்ந்த வெங்காய வியாபாரி இந்திரராஜ் ( வயது 33) என்பவரை நேற்று கைது செய்தார் .இவரிடம் இருந்து 8 பவுன் நகை மீட்கப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.