கோவையில் பட்ட பகலில் காருக்கு தீ வைப்பு..!

கோவை கணபதி மணியகாரம்பாளயத்தில் உள்ள நட்சத்திரா கார்டனில் வசிப்பவர் கோபிநாத், இவரது மனைவி சரண்யா. இவர்களது காரை தங்களது வீட்டின் முன் நிறுத்தி இருந்தனர். தூசி படாமல் இருக்க கார் மீது கவர் போட்டு மூடி வைத்திருந்தனர். நேற்று மதியம் ஒரு மணி அளவில் அந்த காரில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்ததும் அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிச் சென்று தீயை அணைத்தனர். கார் மீது போடப்பட்டிருந்த கவர் மற்றும் காரில் உள்ள பாகங்கள் எரிந்தன .இது குறித்து சரண்யா துடியலூர் போலீசில் புகார் செய்தார். புகாரில் கடநத சில நாட்களாக .சரண்யாவுக்கு சிலர் மிரட்டல் விடுத்து வந்ததாகவும் அவர்கள்தான் அந்த காருக்கு தீ வைத்திருப்பதாக கூறியுள்ளார்.. இது குறித்து துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.. பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் உள்ள இடத்தில் காருக்கு தீ வைத்திருப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியு ள்ளது..