21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மேயர், துணை மேயர் என 1,296 பதவிகளுக்கு நாளை மறைமுக தேர்தல்.!!

தமிழகம் முழுதும் உள்ள, 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நடைபெற்ற தேர்தலில், தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மாநகராட்சிகள் அனைத்தும் தி.மு.க., வசம் வந்தன. மொத்தம் உள்ள 138 நகராட்சிகளில், 132ஐ பெரும்பான்மையுடன் கைப்பற்றி உள்ளது. அதேபோல, மொத்தம் உள்ள 490 பேரூராட்சிகளில், 435 தி.மு.க., வசம் வந்துள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றுள்ள 1,373 மாநகராட்சி கவுன்சிலர்கள், 3,842 நகராட்சி கவுன்சிலர்கள், 7,604 பேரூராட்சி கவுன்சிலர்கள் நேற்று (மார்ச் 2) பதவியேற்றனர்.

நாளை (மார்ச் 4) 21 மேயர், துணை மேயர்; 138 நகராட்சி தலைவர், துணைத் தலைவர்; 489 பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் என, மொத்தம் 1,296 பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடக்க உள்ளது. இப்பதவிகளில் சிலவற்றை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளதாக திமுக அறிவித்துள்ளது. அதன்படி, காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மேயர், இரு துணை மேயர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு மாநகராட்சி துணை மேயர் பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் திமுக தன் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

சென்னை மாநகராட்சி மேயர் – ஆர்.பிரியா, துணை மேயர் – மு.மகேஷ் குமார்.
மதுரை மாநகராட்சி மேயர் – இந்திராணி
திருச்சி மாநகராட்சி மேயர் – மு.அன்பழகன், துணை மேயர் – திவ்யா தனக்கோடி
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் – பி.எம்.சரவணன், துணை மேயர் – கே.ஆர்.ராஜூ
கோவை மாநகராட்சி மேயர் – கல்பனா, துணை மேயர் – வெற்றிச்செல்வன்

சேலம் மாநகராட்சி மேயர் – ஏ.ராமச்சந்திரன்
திருப்பூர் மாநகராட்சி மேயர் – என்.தினேஷ் குமார்
ஈரோடு மாநகராட்சி மேயர் – நாகரத்தினம், துணை மேயர் – செல்வராஜ்
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் – என்.பி.ஜெகன், துணை மேயர் – ஜெனிட்டா செல்வராஜ்
ஆவடி மாநகராட்சி மேயர் – ஜி.உதயகுமார்

தாம்பரம் மாநகராட்சி மேயர் – வசந்தகுமாரி கமலகண்ணன், துணை மேயர் – ஜி.காமராஜ்
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் – மகாலட்சுமி யுவராஜ்
வேலூர் மாநகராட்சி மேயர் – சுஜாதா அனந்தகுமார், துணை மேயர் – சுனில்
கடலூர் மாநகராட்சி மேயர் – சுந்தரி
தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் – சண்.ராமநாதன், துணை மேயர் – அஞ்சுகம் பூபதி

கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் – தமிழழகன்
கரூர் மாநகராட்சி மேயர் – கவிதா கணேசன், துணை மேயர் – தாரணி பி.சரவணன்
ஒசூர் மாநகராட்சி மேயர் – எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் – சி.ஆனந்தைய்யா
திண்டுக்கல் மாநகராட்சி மேயர் – இளமதி, துணை மேயர் – ராஜப்பா
சிவகாசி மாநகராட்சி மேயர் – சங்கீதா இன்பம், துணை மேயர் – விக்னேஷ் பிரியா
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் – மகேஷ், துணை மேயர் – மேரி பிரின்சி