கோவையில் “ஆரஞ்சு அலார்ட்” என்ற பெயரில் 1000 போலீசார் 120 இடங்களில் நடத்திய திடீர் சோதனை..!

கோவையில் “ஆரஞ்சு அலார்ட்” என்ற பெயரில் 1000 போலீசார் 120 இடங்களில் நடத்திய திடீர் சோதனை..!  கோவையில் குற்றங்களில் ஈடுபடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது .அந்த வகையில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் நேற்று மாலை “ஆரஞ்சு நிற அலார்ட்” என்ற பெயரில் திடீர் வாகன சோதனை ஒத்திகை நடந்தது. மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் சதீஷ், சண்முகம் ஆகியோர் தலைமையில் 1000 போலீசார் முக்கியசாலைகளின் சந்திப்பு, பொதுமக்கள் அதிகம்நடமாடும் பகுதி, குற்ற சம்பவங்கள் நடக்கும் இடங்கள் என மொத்தம் 120 இடங்களில் வாகன சோதனைகளில் ஈடுபட்டனர் .இந்த சோதனையின் போது போலீசார் மோட்டார் சைக்கிள், கார்,பஸ், லாரி உள்பட அனைத்து வாகனங்களையும் அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர். மேலும் வாகனங்களில் வந்தவர்களின் அடையாள அட்டை, டிரைவரின் ஓட் டுனர் உரிமம் வாகனத்தின் பதிவு சான்று போன்ற ஆவணங்கள் பரிசோதித்த பிறகு அனுப்பி வைக்கப்பட்டனர் போலீசாரின் அதிரடி வாகன தணிக்கை நடந்ததால் சாலைகளில் சென்று வாகன ஓட்டிகள் கோவையில் ஏதோ அசம்பாவிதம் நடந்துள்ளதோ? என அச்சமடைந்தனர். அப்போது போலீசார் அவர்களிடம் இது குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக நடத்தபடும் “ஆரஞ்சு அலார்ட” என்று கூறினர் .இது குறித்து மாநகர போலீஸ் துணை கமிஷனர் சந்தீஷ் கூறியதாவது: ஏதாவது குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு விட்டு தப்பியவர்களை பிடிப்பதற்காகவும் குற்ற சம்பவங்களை தடுக்ககவும்”ஆரஞ்சு அலார்ட்” என்ற பெயரில் வாகன சோதனை ஒத்திகை நடத்தப்பட்டது.பொதுவாக ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றால் சிவப்பு நிற அலார்ட், ஆரஞ்சு நிற அலார்ட் மற்றும் மஞ்சள் நிற அலார்ட் ஆகிய 3 வகையில் எச்சரிக்கை கொடுக்கப்படும்.. இந்த எச்சரிக்கை பெரும்பாலும் கடலோர மாவட்டங்கள், கனமழை பேரிடர் காலங்களில் விடுக்கப்படும் .அது போன்று தற்போது போலீஸ் துறையில் கொண்டு வந்து ஒத்திகை நடத்தப்பட்டது ஒரு இடத்தில் கொள்ளை அல்லதுவழிப்பறி சம்பவம் நடந்தால் போலீசாரை உஷார் படுத்தி குற்றவாளிகளை உடனே பிடிப்பதற்காக ஆரஞ்சு நிற அலார்ட் அறிவிக்கப்படும் .இதன் மூலம் போலீசார் அதிரடியாக வாகன தணிக்கையில் ஈடுபடுவார்கள். தற்போது கோவையில் தான் தமிழ்நாட்டில் முதல் முறையாக ஆரஞ்சு நிற அலார்ட்” நடத்தப்பட்டுள்ளது. ஆர். எஸ். புரம் பகுதியில் ஒருவர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி செல்வது போன்று போலீஸ்காரர்ஒருவர் நடித்தவாறு சென்றார்.அவரை ஆரஞ்சு நிற அலர்ட் சோதனையில் ஈடுபட்ட போலீசார் மடக்கிப்பிடித்தனர். இந்த ஒத்திகை வெற்றிகரமாக நடந்தது .இவர் அவர் கூறினார்..இந்த ஆரஞ்சு நிற அலார்ட்சோதனை எப்படி நடைபெறுகிறது? என்பதை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டார்.