மருதமலை கோவிலில் சாமி தரிசனம் நேரம் குறைப்பு..! 

மருதமலை கோவிலில் சாமி தரிசனம் நேரம் குறைப்பு..!  மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்லும் மலைப்பாதை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதையொட்டி நாளை 9-ந்தேதி ( திங்கள்கிழமை) முதல் ஒரு மாதத்திற்கு கோவில் பஸ் உள்பட இருசக்கர 4சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை .கோவிலுக்கு வருபவர்கள் மலைக்கோவிலுக்கு படிக்கட்டு வழியாக மட்டுமே சென்று சாமி தரிசனம் செய்யலாம். மேலும் படிக்கட்டுப் பாதை பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் காலை 8 மணி முதல் மாலை 4:30 மணி வரை மட்டும் சாமி தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.