பாலக்காட்டில் திருமணமான மறுநாள் கோவை இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை..

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த உடையகுளத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி பொன்னாத்தாள். இவர்களின் மகள் நந்தினி (வயது 21).

பழங்குடி மக்களான இவர்கள் பாலக்காடு மாவட்டம் செம்மணாம்பதி அழகாபுரி காலனியில் குடும்பத்துடன் தங்கி உள்ளனர். அங்கு ஒரு தென்னந்தோப்பில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நந்தினியின் பெற்றோர் அவருக்கு வரன் பார்க்க தொடங்கினர். அப்போது பொள்ளாச்சி காளியாபுரத்தை சேர்ந்த கெவின் என்பவரை அவருக்கு மாப்பிள்ளை பார்த்தனர். இரு குடும்பத்தாரும் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து 2 பேருக்கும் நிச்சயம் செய்தனர். பின்னர் மாப்பிள்ளை- பெண் வீட்டார் திருமணம் செய்து வைப்பதற்காக ஏற்பாடுகளை செய்தனர்.

திருமணத்திற்கு உறவினர்கள், நண்பர்களை அழைத்து கெவினுக்கும் நந்தினிக்கும் கடந்த ஞாயிறுக்கிழமை பெண் வீட்டில் வைத்து திருமணம் நடந்தது. புது மாப்பிள்ளையும், புது பெண்ணும் அலகாபுரி காலனியில் உள்ள பெண் வீட்டில் தங்கினர். மறுநாள் மாலை பொள்ளாச்சியில் உள்ள மாப்பிள்ளை வீட்டிற்கு செல்வதற்காக குடும்பத்தினர் தயாரானர்கள். அப்போது வீட்டில் இருந்த நந்தினி மாயமாகி இருந்தார். உடனே அவரை தேடி பார்த்தனர். அப்போது நந்தினி வீட்டின் அருகே உள்ள தென்னந்தோப்பில் மயங்கி கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் விஷம் குடித்து இறந்தவிட்டதாக தெரிவித்தார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர் இதுகுறித்து கொல்லங்கோடு போலீசாரு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தினி எதற்காக விஷம் குடித்தார்? திருமணத்தில் விருப்பம் இல்லாமல் விஷம் குடித்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.