ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள்- கடும் போக்குவரத்து நெரிசல்..!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் புத்தாண்டை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

இதனால் ஊட்டியின் முக்கியமான சாலைகளில் சுற்றுலா வாகனங்கள் நிறைந்து காணப்படுகிறது.அனைத்து உணவகங்கள் மற்றும் கடைவீதிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர் தங்களது சொந்த வாகனங்களிலேயே வந்து செல்கின்றனர்.

இதன் காரணமாக அனைத்து சுற்றுலா மையங்களிலும் கடுமையான கூட்டம் காணப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகன நெரிசல் அதிகரித்துள்ளதால் ஊட்டி நகரின் முக்கிய சாலைகளில் ஒரு கிலோ மீட்டர் தூரத்தை கடப்பதற்கு அரைமணி நேரம் வரை ஆகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

இதனால் சட்ட ஒழுங்குழு போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் பல்வேறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சுற்றுலா பயணிகள் இடையூறு இல்லாமல் வந்து செல்லும் வகையில் போக்குவரத்து மற்றும் போலீஸ் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.