நடத்தையில் சந்தேகம் மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை..

கோவை: அசாமை சேர்ந்தவர் நூர் உசைன் ( வயது 35). இவரது மனைவி ரோஷ்பினா ஓதின் (22). இவர்களுக்கு 7 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் நூர் உசைன் தனது குடும்பத்துடன் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கோவை வந்தார். இங்கு பேரூரை அடுத்த மாதம்பட்டியில் தங்கி இறைச்சி கடையில் வேலை செய்து வந்தார். நூர் உசைனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. மேலும் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு வந்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் அவரது மனைவி ரோஷ்பினா ஓதின் கோபித்து கொண்டு தனது குழந்தைகளை அழைத்து கொண்டு வீட்டை விட்டு சென்றார். இதனை நினைத்து நூர் உசைன் மனதேனை அடைந்தார்.
சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதனை அக்கம் பக்கத்தினர் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வீட்டுக்கு விரைந்து வந்து நூர் உசைனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து பேரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.