கோத்தகிரியில் மாறிய காலநிலை: குறைந்த தேயிலை மகசூல்- விவசாயிகள் கவலை ..!

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை எஸ்டேட்கள் மட்டுமின்றி, சிறு, குறு தேயிலை விவசாயிகள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 65 ஆயிரம் விவசாயிகள் தேயிலை சாகுபடி செய்து வருகிறார்கள்.

மழையும், வெயிலும் மாறி மாறி இருந்தால் மட்டுமே தேயிலை மகசூல் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் மற்றும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் துரித வளர்ச்சி காலமாக உள்ளது. தேயிலை செடியில் கொழுந்துகள் நன்கு வளர சூரிய ஒளி தேவைப்படுகிறது. அது மட்டும் இன்றி சரியான முறையில் இடுப்பொருட்கள் தெளிப்பான்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஆனால், இந்த ஆண்டில் துரித வளர்ச்சி பருவ காலமான அக்டோபர் மாதம் முதல் தற்போது வரை தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், போதிய சூரிய வெளிச்சம் இல்லாததாலும் பச்சை தேயிலை மகசூல் குறைந்து உள்ளது. வழக்கமாக டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பனிப்பொழிவு காரணமாக தேயிலை கொழுந்துகள் கருகி விடும். தற்போது பனிப்பொழிவு இல்லா விட்டாலும், தொடர் மழை, மேகமூட்டத்துடன் கூடிய சீதோஷ்ண காலநிலை காரணமாக சில பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் உள்ள செடிகளில் கொப்புள நோய் பாதிக்கப்பட்டு உள்ளது.

இதுமட்டுமின்றி பல பகுதிகளில் தேயிலை தோட்டங்களில் மகசூல் வெகுவாக குறைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். தேயிலைத் தொழிற்சாலைகளில் பச்சை தேயிலை முன்று தயக்கமாக பிரித்து கிலோவுக்கு ரூ.18 முதல் ரூ.19 வரை கொள்முதல் விலை கிடைக்கிறது. முதல் தர தேயிலைக்கு ரூ.25 வரை விலை கிடைக்கிறது. கோத்தகிரியில் மாறிய காலநிலையால் தேயிலை மகசூல் குறைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.