சாலை விபத்தில் கோவை பாஜக இளைஞர் அணி செயலாளர் பரிதாப பலி..

கோவை செட்டி வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் நரேஷ் குமார் (வயது 30 ) இவர் கோவை மாநகர் மாவட்ட பா.ஜ. இளைஞர் அணி செயலாளராக பதவி வகித்து வந்தார். இவர் நேற்று இரவு மாதம்பட்டி ரோட்டில் பைக்கில் சென்ற போது 2 சிறுவர்கள் ஓட்டி வந்த மற்றொரு பைக் இவரது பைக் மீது மோதியது. .இதில் படுகாயம் அடைந்த நரேஷ் குமார் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இன்று அதிகாலை 3 மணிக்கு இறந்தார். இதுகுறித்து பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..