கோவையில் காதல் மனைவி திடீர் மாயம்- கணவன் போலீசில் புகார்…

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகன் மணிகண்டன். சிற்பத் தொழில் செய்து வரும் இவருக்கும் கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த சினேகா என்பவருக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு மணிகண்டன் நாகப்பட்டினத்தில் இருந்து கோவைக்கு வந்து சினேகாவின் வீட்டின் அருகே வீடு எடுத்து மனைவியுடன் வசித்து வந்தார். சினேகா பீளமேடு பகுதியில் உள்ள தனியார் துணிக்கடை ஒன்று பணி புரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிகண்ட ன் தனது சொந்த ஊருக்கு சென்றார் .பின்னர் சினேகாவின் தந்தை மணிகண்டனுக்கு செல்போன் மூலம் அழைத்து சினேகாவை காணவில்லை என கூறியிருக்கிறார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் கோவைக்கு விரைந்து வந்தார். பல இடங்களில் தேடி பார்த்ததும் அவர் கிடைக்கவில்லை. இதை அடுத்து மணிகண்டன் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.