கோவையில் தெரு நாய்களுக்கு உணவளித்த பெண்: விரட்டி அடித்த குடியிருப்புவாசிகள்!!!

கோவையில் தெரு நாய்களுக்கு உணவளித்த பெண்: விரட்டி அடித்த குடியிருப்புவாசிகள்!!!

வீட்டு வேலை செய்யும் பெண் நாய்களுக்கு உணவளிப்பதை சில நபர்கள் தடுத்த நிலையில் அவ்வாறு தடுத்தால் வழக்குப் பதிவு செய்யப்படும் என காவல் துறையினர் எச்சரித்து உள்ளனர்.

கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெனிஃபர். இவர் அப்பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தெரு நாய்களுக்கு உணவளிப்பதையும் வழக்கமாக கொண்டு உள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் புதிதாக வந்து உள்ள சில குடியிருப்பு வாசிகள் ஜெனிஃபரிடம் தெரு நாய்களுக்கு எல்லாம் உணவளிக்க கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி வந்து உள்ளனர். இதனால் விலங்குகள் ஆர்வலர் செலீனா என்பவரின் உதவியுடன் ஜெனிஃபர் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில் அப்புகார் குறித்து காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இருந்து ஜெனிஃபரை விசாரிக்க அழைத்து உள்ளனர். அதற்காக ஜெனிஃபர் மற்றும் செலீனா ஆகிய இருவரும் வருகை தந்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செலீனா :-

இரவு நேரத்தில் நாய்களுக்கு உணவளிப்பது சரி தான் என காவல் ஆணையாளர் அலுவலகத்தில் அதிகாரிகள் கூறியதாகவும், யாரும் உங்களை தடுக்க கூடாது பயமுறுத்த கூடாது என சில சட்டங்களை கூறியதாக தெரிவித்தார். மேலும் யாரேனும் தடுத்தால் அவர்கள் மீது வழக்கு பதியப்படும் என அதிகாரிகள் கூறியதாகவும் தெரிவித்தார்.

காவல் ஆணையாளரை சந்திப்பதற்கு முன் பேட்டி அளித்த செலீனா, இத்தனை நாட்களாக அங்கு எந்த வித பிரச்சனையும் இல்லை எனவும் ஆனால் தற்போது புதிதாக குடி வந்த ஒரு சில நபர்கள் நாய்களுக்கு உணவு அளிக்க கூடாது என தெரிவிப்பதாகவும், வசதியாக இருக்கும் இடத்தில் இது போன்று அசிங்கமான விஷயங்களை செய்ய கூடாது என கூறிவதாக தெரிவித்தார். மேலும் இவ்வாறு செய்தால் திருட்டு பட்டம் கட்டி விடுவோம் என மிரட்டியதாக தெரிவித்தார்.

மேலும் அவர்கள் சில நாய்களை வாகனங்களை ஏற்றி கொன்று இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறியதாகவும் இது குறித்தும் ஜெனிஃபர் போலிசாரிடம் கூறிய போது சம்பந்தப்பட்டவர்கள் ஜெனிஃபர் மற்றும் அவரது கணவரை மிரட்டியதாக தெரிவித்தார். மேலும் ஜெனிஃபர் கோழி கழிவுகளை எல்லாம் பச்சையாக நாய்களுக்கு போடுவதாக பொய்யாக குற்றம் சாட்டுவதாக தெரிவித்தார்.