கல்லூரி மாணவரை மிரட்டி: கோவையில் செல்போன், பணம் பறிப்பு…

கல்லூரி மாணவரை மிரட்டி: கோவையில் செல்போன், பணம் பறிப்பு…

 

கோவை கணபதி பாலன் நகரை சேர்ந்தவர் நந்தகுமார் (18). கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர், நேற்று தனது நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக ரத்தினபுரி ரூட்ஸ் பாலத்தின் அடியில் நடந்து சென்று கொண்டு இருந்த போது அவரை வழிமறித்த 2 பேர் அவரிடம் பணம், செல்போன் தருமாறு மிரட்டினர். அவர் கொடுக்க மறுத்ததால் அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ. ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்து நந்தகுமார் அளித்த புகாரின் பேரில் ரத்தினபுரி போலீசார் வழக்குப் பதிவு செய்து கல்லூரி மாணவரிடம் செல்போன், பணம் பறித்துச் சென்ற 2 பேரை தேடி வருகின்றனர்.