கோவை வனப்பகுதியில் வன விலங்குகள் ரயில் தண்டவாளத்தைக் கடந்து செல்ல நிலத்தடி பாலம்..!

கோவை மாவட்டம், மதுக்கரையில் இருந்து பாலக்காட்டுக்கு வனப் பகுதி வழியாக 2 ரயில் பாதைகள் உள்ளன. இதில் முதலாவது (ஏ) பாதை சுமாா் 17 கிலோ மீட்டா் தொலைவும், இரண்டாவது (பி) பாதை 23 கிலோ மீட்டா் தொலைவும் கொண்டது.

யானைகள் வழித்தடத்தில் உள்ள இந்த தண்டவாளத்தில் ரயில் மோதி யானைகள் அடிக்கடி உயிரிழந்து வருகின்றன. இதனால் யானை உள்ளிட்ட வன விலங்குகள் ெரயில் பாதையை கடக்கும் இடத்தில் நிலத்தடியில் பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வந்தது. இதைத் தொடா்ந்து, நிலத்தடி பாலம் அமைக்க ரயில்வே நிா்வாகம் ரூ.7.49 கோடியை ஒதுக்கியிருந்தது. அதன்படி, 2-வது (பி) பாதையில் மதுக்கரை – எட்டிமடை ரயில் நிலையங்களுக்கு இடையே 8 மீட்டா் உயரமும், 18.3 மீட்டா் அகலமும் கொண்ட நிலத்தடி பாலம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.

இதன் முக்கிய பணியான இரு அகலமான இரும்புப் பாலங்களை ரயில் பாதையின் குறுக்கே பொருத்தும் பணி நடைபெற்று வந்தது. இதன் காரணமாக 6 ரயில்களின் சேவைகள் பகுதியளவும், முழுவதுமாகவும் ரத்து செய்யப்பட்டிருந்தது.
பணிகள் நிறைவடைந்ததை அடுத்து இந்த பாதையில் வழக்கமான ரயில் சேவை நடைபெற்றதாக பாலக்காடு ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அதிகமான விபத்துகள் நடைபெற்ற தண்டாவளத்தில் நிலத்தடி பாதை அமைக்கப்பட்டிருப்பதால் இனி யானைகள் ரயிலில் சிக்கி பலியாவது தடுக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.