அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் 25-ந் தேதி கோவை வருகை..!

கோவை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 24-ந் தேதி இரவு கோவை வருகிறார். பின்னர் இரவு கோவையில் தங்குகிறார். மறுநாள் 25-ந் தேதி காலை நேரு ஸ்டேடியத்தில் புதுப்பிக்கப்பட்ட ஓடு தள பாதையை திறந்து வைக்கிறார். இதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். பின்னர் மாலை பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அமைச்சரான பிறகு உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக கோவை வர உள்ளார். இது கோவை மக்களிடையும், தி.மு.க.வினர்களிடையும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க தி.மு.க.வினர் தயாராகி வருகின்றனர்.