கோவையில் 2 போலீஸ்காரர் வீட்டில் 67 பவுன் நகை, பணம் திருட்டு ..!

கோவைபுதூரில் உள்ள எஸ்.பிளாக்கில் வசிப்பவர் ஜான் சேவியர் (வயது 46) இவர் போத்தனூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் பெண் போலீசாக வேலை பார்த்து வருகிறார். இவர்களது வீட்டில் ஒரு பகுதியை கபிலன் என்பவருக்கு வாடகைக்கு கொடுள்ளனர். நேற்று முன்தினம் ஜான் சேவியரும் அவரது மனைவி வேலைக்கு சென்று விட்டனர். கபிலனும் வெளியே சென்று இருந்தார் .இந்த நிலையில் யாரோ மர்ம ஆசாமிகள் போலீஸ்காரர் ஜான் சேவியர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 39 பவுன் நகைகளும், ரூ 9ஆயிரம் பணத்தையும் திருடி சென்று விட்டனர். பக்கத்தில் உள்ள கபிலன் வீட்டின் பூட்டை உடைத்து அங்கிருந்த 28 பவுன் நகைகளும் ரூ.75 ஆயிரம் பணத்தையும் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இது குறித்து போலீஸ்காரர்ஜான் சேவியர் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..