பிளஸ் 1 மாணவி திடீர் மாயம்..!

கோவை ஆலந்துறை பக்கம் உள்ள கோட்டை காடு பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து .இவரது மகள்  கீர்த்தனா ( வயது 16) மத்வராயபுரத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படித்து வருகிறார். நேற்று தனது தாத்தா வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தாயார் சிவகாமி ஆலந்துறை போலீசில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.