கோவையில் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – ஒருவர் பலி..

கோவையில் இந்த மாதம் தொடக்கத்தில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்றது.அது கடந்த 4 நாட்களாக சற்று குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் கோவை மாவட்டத்தில் 55 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது .அதுவே நேற்று தினசரி பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து 51 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 42 ஆயிரத்து 674 ஆக அதிகரித்தது. கொரோனாவில் இருந்து நேற்று 66 பேர் குணமடைந்தனர். தற்போது 416 பேர் சிகிச்சையில் உள்ளனர் .இதற்கு இடையில் கோவை சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவர் சளி  இருமல் மற்றும் சுவாச கோளாறு காரணமாக கடந்த 23ஆம் தேதி இரவு கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் .அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனளிக்காமல் 25ஆம் தேதி மாலை உயிரிழந்தார். அவருக்கு நிமோனியா பாதிப்பும் இருந்தது தெரிய வந்தது. கோவை மாவட்டத்தில் இதுவரை 2,619 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்..