50 வயதுக்கு மேற்பட்ட போலீசாருடன் கமிஷனர் கலந்துரையாடல்..!

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 50 வயதை கடந்த காவலர்களுடன் போலீஸ் கமிஷனர் நேற்று கலந்துரையாடினார். இதில் சட்டம் ஒழுங்கு-போக்குவரத்து போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் சப் இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுக்கல் பலர் கலந்து கொண்டனர். இந்த கலந்துரையாடலில் அவர்களின் தேவைகளையும் கோரிக்கைகளையும் போலீஸ் கமிஷனர் கேட்டறிந்தார். அப்போது பலரும் தங்களுக்கு 50 வயதிற்கு மேல் ஆகிவிட்டதால் நீண்ட தூரம் வாகனங்கள் ஓட்டுவதில் சிரமம் ஏற்படுவதாகவும், மருத்துவப் பிரச்சினைகளை இருப்பதாகவும் தெரிவித்தனர். எனவே அவரவர் வீட்டின் அருகிலேயே உள்ள காவல் நிலையங்களில் பணியினை ஒதுக்கி தருமாறு கேட்டுக் கொண்டனர். காவலர்களின் கோரிக்கைகளை கேட்ட போலீஸ் கமிஷனர் இது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்தார். மேலும் அவர்களின் வாழ்நாள் அனுபவங்களையும் கேட்டறிந்த கமிஷனர் போலீசார் உடல் நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள் எனவும் பணி சம்பந்தமான தேவைகள் எதுவாயினும் தெரிவிக்கும்படியும் கூறினார். 50 வயது கடந்த தங்களை அழைத்து போலீஸ் கமிஷனர் நலம் விசாரித்ததும், தங்கள் தேவைகளையும் குறைகளையும் கேட்டு அறிந்ததும் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியும் ஆறுதலையும் அழிப்பதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போலீசார் தெரிவித்தனர்.