வியாபாரி மனைவியிடம் 7 பவுன் செயின் பறிப்பு – பைக் ஆசாமிகள் கைவரிசை..!

கோவை அருகே உள்ள நீலாம்பூர் ,அண்ணா நகரை சேர்ந்தவர் பழனி குமார். அங்கு மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி நிவேதா ( வயது 24)இவர் நேற்று கடையில் இருந்தார்.அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் அங்கு வந்தனர்.தர்பூசணி வாங்குவது போல விலை கேட்டுக் கொண்டிருந்தனர்.ஒரு தர்பூசணி காட்டி அதை எடுக்குமாறு நிவேதாவிடம் கூறினார்கள்.அவர் குனிந்து எடுக்கும் போது அவரது கழுத்தில் நடந்த 7 பவுன்  தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு பைக்கில் 2பேரும் தப்பி ஓடி விட்டனர்.இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.