திருமழிசை பள்ளிகளில் காலை சிற்றுண்டி… மாணவர்கள் ஆனந்த கண்ணீர்.!!

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பேரூராட்சி பகுதிகளில் உள்ள ஆரம்பப் பள்ளி நடுநிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப் பள்ளிகளில் சுவையான காலை சிற்றுண்டி தரமாகவும் மாணவர்கள் போதும் போதும் என்ற அளவிற்கு போடப்பட்டு வருகின்றன . இதற்கான நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தன . விழாவில் பூந்தமல்லி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆ கிருஷ்ணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கினார். விழாவில் திருவள்ளூர் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜெயக்குமார் பேரூராட்சி மன்ற தலைவர் வடிவேலு பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜெயக்குமார் மாணவர்களை அழைத்து பேசுகையில் காலை சிற்றுண்டி குறித்து கேட்டறிந்தார். மாணவர்கள் பதிலுக்கு எங்கள் பெற்றோர்கள் பள்ளிக்கு வெறும் வயிற்றோடு அனுப்பி விடுவார்கள். பள்ளியில் தான் நல்ல டிபனை பார்க்கிறோம். முதல்வர் ஐயாவிற்கும் பெரிய ஆபீசருக்கும் நன்றி என ஒட்டுமொத்தமாக குரல் எழுப்பினர்..