2 வது மனைவி வீட்டு முன் கணவர் தீக்குளித்து தற்கொலை..

கோவை சூலூர் பக்கம் உள்ள பட்டணம் காவேரி நகரை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 42) இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு நாகஜோதி (வயது 42) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2குழந்தைகள் உள்ளனர். குடும்பத்த தகராறு காரணமாக 15 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரிந்து விட்டனர். இந்த நிலையில் வேல்முருகன் மீனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்க்கை நடத்தி வந்தார். இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மீனா அவருடன் கோபித்துக் கொண்டு பட்டணத்தில் உள்ள தன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். மீனாவை அழைக்க 24 -ந்தேதி மீனா வீட்டுக்குவேல்முருகன் சென்றார். மீனாவை பார்க்கவேண்டும். என்றார்.அதற்கு மீனாவின் தம்பி சீனிவாசன் மறுத்துவிட்டார்.இதனால் மனம் உடைந்த வேல் முருகன் மீனாவின் வீட்டின் முன் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.இதில் உடல் முழுவதும் கருகியது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இறந்தார். இது குறித்துவேல்முருகனின் முதல் மனைவி நாகஜோதி சூலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..