லாரி மோதி இன்ஜினியர் உட்பட 2பேர் பலி..

கோவை: கேரள மாநிலம் திருச்சூர் பக்கம் உள்ள முண்டத்திக் கொடியை சேர்ந்தவர் பூபன் லாசர்.இவரது மகன் போஸ் பூபன் (வயது 27)சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார்.இவர் நேற்று சேலம்- பாலக்காடு ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.மதுக்கரை அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கண்டெய்னர் லாரி இவரது பைக் மீது மோதியது.இதில் போஸ் பூபன் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார். இது குறித்து மதுக்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் வைரம் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக கண்டெய்னர் லாரி டிரைவர் பாபு என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதே போல மதுக்கரை அருகே உள்ள எட்டிமடை, கம்பர் வீதியை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மகன் சரவணகுமார் (வயது 27) இவர் நேற்று சேலம்- கொச்சின் பை-பாஸ் ரோட்டில் பைக் ஓட்டிச் சென்றார்.சூலூர் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த லாரி இவரது பைக் மீது மோதியது. இதில் சரவணகுமார் படுகாயம் அடைந்து அதே இடத்தில் பலியானார். இது குறித்து அவரது தந்தை வேலுச்சாமி சூலூர் போலீசில் புகார் செய்துள்ளார் . போலீசார் சென்று லாரி டிரைவர் விசாரணை நடத்தி நெல்லை மாவட்டம் நாங்குநேரி , மூலக்கரைபட்டியை சேர்ந்த ரிச்சர்ட் (வயது 40 )என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனா் .