செல்போனில் மனைவிக்கு மெசேஜ் அனுப்பி விட்டு கணவர் தூக்கிட்டு தற்கொலை..

கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு ராகவேந்திரா காலனியை சேர்ந்தவர் ஹரி பரசுராமன் (வயது 22) கீரணத்தத்தில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார் . அவரது மனைவி சுபஸ்ரீ (வயது 19) இவர்களுக்கு திருமணமாகி சில மாதங்களே ஆகிறது. இந்த நிலையில் கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக சுபஸ்ரீ கோபித்துக் கொண்டு கடந்த 19 ஆம் தேதி பொள்ளாச்சியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் ஹரி பரசுராமன் நேற்று அவரது மனைவிக்கு செல்போனில் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மெசேஜ் அனுப்பி விட்டு வீட்டில் மின்விசிறியில் வேட்டியை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சுபஸ்ரீ துடியலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..