துடியலூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்.!!

கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணர் பகுதியில் வசிப்பவர் அர்ஜுனன். விவசாயி இவர் தனது மகன் கார்த்திக்குடன் சேர்ந்து விவசாயம் செய்து வருகிறார். சம்பவத்ன்று கள் இறக்கியதாக கார்த்திக்கை துடியலூர் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இது குறித்த தகவல் அறிந்ததும் நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ஏ. எஸ். பாபு தலைமையில் விவசாயிகள் திரண்டு வந்து துடியலூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்தநிலையில் விவசாயி கார்த்திகை போலீசார் ஜாமில் வெளியே விட்டதால் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது –